நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதை வெறும் வயிற்றில் குடிக்கலாம்.. அமைச்சர் டிப்ஸ்!

இந்த கொரோனா காலத்தில் பல தரப்பினரும் பல வகையில் ஆலோசனை குடுத்து வரும் நிலையில், நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக, மீன்வள துறை அமைச்சர் மக்களுக்கு கொரோனா டிப்ஸ் வழங்கியுள்ளார்.

சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், கொரோனா அதிகம் உள்ள பகுதியில் ஒருவர் 2 முறை தடுப்பை தாண்டி வெளியே சென்றால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என தெரிவித்தார். 

மேலும், நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, 5 நாள் சீரக குடிநீரை மக்கள் வெறும் வயிற்றில் குடிக்கலாம் என கூறினார். ஒரு டம்ப்ளர் தண்ணீரில் ஒரு பச்சை மிளகாய், சிரகம், மஞ்சள், உப்பு தலா ஒரு சிட்டிகை அளவு சேர்த்து தினம்தோறும் வெறும் வயிற்றில் குடித்தால் நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என கூறினார்.