சாத்தான் குளத்தில் பென்னிக்ஸ் நண்பர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

சாத்தான் குளத்தில் பென்னிக்ஸ் நண்பர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

சாத்தான் குளத்தை சேர்ந்த தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பெனிக்ஸ் இருவரும், காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இவர்களது மரணதிற்கு நீதி  பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருமே கண்டன குரல் எழுப்பி இருந்தனர்.

இதனையடுத்து, சிபிசிஐடி போலீசார் நேற்று காலை தந்தை, மகன் வழக்கு தொடர்பான விசாரணையை தொடங்கியது. சிபிசிஐடி போலீசார் நேற்று முதல் ஜெயராஜ் வீடு, கடை மற்றும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தினர். தந்தை – மகன் கொலைவழக்கில் 5 போலீசார் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து, பெனிக்சின் நண்பர்கள், சாத்தான்குளம் பகுதியில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.