ஒத்த செருப்பு படத்தை தொடர்ந்து பார்த்திபனின் அடுத்த அதிரடி! இப்போது என்ன செய்ய போகிறார் தெரியுமா?

  • ராதாகிருஷ்ணன் பார்த்திபன் நடித்து எழுதி இயக்கிய திரைப்படம் ஒத்த செருப்பு.
  • இந்த படத்தில் அவர் மட்டுமே நடித்திருந்தார். படம் பலரது பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றது.

தமிழ் சினிமாவில் தனது வித்தியாசமான முயற்சிகள் மூலம் தமிழ் சினிமா கலைஞர்களின் வித்தியாசப்பட்டு நிற்கிறார் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ஒத்த செருப்பு. இந்த திரைப்படத்தை அவரே எழுதி இயக்கி தயாரித்து இருந்தார். மேலும் அவர் மட்டுமே இப்படத்தில் நடித்திருந்தார்.

அந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. அதேபோல் திரையுலகினர் மத்தியில் பாராட்டுகளையும் பெற்றது. மேலும் இந்த படத்தை பல திரைப்பிரபலங்கள் இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

ஒத்த செருப்பு படத்தை தொடர்ந்து அடுத்ததாக பார்த்திபன் ஒரே டேக்கில் அதாவது எந்தவித கட் செய்யாமலும் ஒரு முழுநீள படத்தை எடுக்க உள்ளாராம். இதற்கான முதல் கட்ட பணிகளில் களமிறங்கியுள்ளாராம். இந்த பட அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு இரவின் நிழல் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.