கொரோனா நோயாளிகளுக்காக விருதுநகரில் சித்த மருத்துவ சிகிச்சை மையம்!

விருதுநகரில் கொரோனா நோயாளிகளுக்கான சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை ஆரம்பித்துள்ளனர்.

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த படி தான் உள்ளது. இந்நிலையில் இதற்கான மருந்துகளையோ அல்லது தடுப்பூசிகளையோ இன்னும் கண்டுபிடிக்க படாத நிலையில் பல இடங்களில் சித்த மருத்துவம் மூலமாக குணமாக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கான சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை விருதுநகர் மாவட்டத்தில் தொடங்கியுள்ளனர். 154 படுக்கை வசதிகளுடன் கூடிய அறைகள் உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 300க்கும் மேற்பட்ட நோயாளிகள் இங்கு வந்துள்ளனர்.

author avatar
Rebekal