எல்லையில் வீர‌மரணம் அடைந்த பழனியின் உடல் நல்லடக்கம்…!

எல்லையில் வீர‌மரணம் அடைந்த தமிழக வீர‌ர் பழனியின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில்  20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.இதில் தமிழகத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த பழனி என்ற ராணுவ வீரர், அந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்தார்.  நேற்று வீரமரணமடைந்த பழனியின் உடல் ராணுவ விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. 

இதன் பின்னர் பழனியின் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூருக்கு கொண்டு செல்லப்பட்டது.அங்கு உயிர் தியாகம் செய்த பழனிக்கு முப்படையினர் இறுதி மரியாதை செலுத்தினார்கள். பழனியின் உடலுக்கு ஆட்சியர் வீர ராகவராவ், தமிழக காவல் உயர் அதிகாரிகளும் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.இறுதியாக வீர‌மரணம் அடைந்த  பழனியின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.