#PAKvSA : பாகிஸ்தானை ஆல் அவுட் எடுத்த தென்னாப்பிரிக்கா.. 271 ரன்கள் வெற்றி இலக்கு!

ஐசிசி ஒருநாள் உலக்கோப்பைத் தொடரில் இதுவரை 25 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்று 26-ஆவது லீக் போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் மற்றும் தெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி பலப்பரீட்சை செய்து வருகிறது. சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, தென்னாபிரிக்கா அணி முதலில் பந்துவீசியது. இதில், முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்க வீரர்களான அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இந்த சூழலில் பாகிஸ்தான் நட்சத்திர ஆட்டக்காரர்களான கேப்டன் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஜோடி சற்று நிதானமான ஆட்டத்தை  வந்த நிலையில், ரிஸ்வான் 31 விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்தார்.

மறுபக்கம் பாபர் அசாம் தனது அரை சத்தை பூர்த்தி செய்த உடனே பெவிலியன் திரும்பினார். இருந்தாலும், பின்னர் வந்த வீரர்கள் அணியை அகல பாதாளத்தில் இருந்து மீட்டனர். அதில், சவுத் ஷகீல் 52 ரன்கள், ஷதாப் கான் 43 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கொரை உயர்த்தினர். இருப்பினும், இவர்கள் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த வீரர்களும் தென்னாபிரிக்க பந்துவீச்சில் சுருண்டனர்.

இறுதியாக 46.4 ஓவரில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து, 270 ரன்களை எடுத்தது. தென்னாபிரிக்கா பந்துவீச்சை பொறுத்தவரையில் அதிகபட்சமாக தப்ரைஸ் ஷம்சி 4, மார்கோ ஜான்சன் 3, ஜெரால்ட் கோட்ஸி 2 என விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனால், 271 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாபிரிக்கா அணி களமிறங்கியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்