மைதானத்தில் இந்திய தேசிய கீத பாடலை பாடிய பாகிஸ்தான் ரசிகர் !வைரலாகும் வீடியோ

உலகக்கோப்பை தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.இந்த லீக் தொடரில் நேற்றைய 22 -வது போட்டியில் இந்தியா ,பாகிஸ்தான் அணிகள் மோதியது. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது.
போட்டியில்  முதலில் இறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 336 ரன்கள் குவித்தது.போட்டி மழை காரணமாக 40 ஓவராக குறைக்கப்பட்டு 302 ரன்கள் இலக்காக களமிறங்கிய பாகிஸ்தான் அணி பாகிஸ்தான் அணி 40 ஓவர் முடிவில் 212 ரன்கள் எடுத்து 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைத்தது.
இந்நிலையில் இந்தியா ,பாகிஸ்தான் போட்டியின் போது பல சுவரசமான  நிகழ்ச்சிகளும் நடக்கும் அப்படி 2018 -ம் ஆண்டு ஆசியா கோப்பை போட்டியின் போது இந்தியா , பாகிஸ்தான் அணி மோதியது.போட்டியில் விளையாடுவதற்கு முன் விளையாட உள்ள அணிகளின் தங்கள் நாட்டின் தேசிய கீதம் பாடலை பாடுவது வழக்கம்.
அன்று முதலில் இந்திய அணி வீரர்கள் தேசிய கீதம் பாடலை பாடினார்.அப்போது மைதானத்தில் இருந்த பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் தேசிய கீத பாடலை பாடும் வீடியோ வெளியானது.
நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்த நிலையில் தற்போது இந்த  வீடியோ வைரலாக பரவி வருகிறது.இந்த விடியோவை பார்த்த இந்திய அணி ரசிகர்களை பலரை நெகிழ்ச்சியடைய வைத்து உள்ளது.
https://www.facebook.com/mindit.co.in/videos/689510108130018/

author avatar
murugan