Padma Awards 2022:சுந்தர் பிச்சை,பிபின் ராவத்,தடுப்பூசி தயாரிப்பாளர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு

குடியரசு தினத்தை முன்னிட்டு, பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு மத்திய அரசு  2022 ஆம் ஆண்டுக்கான  பத்ம விருதுகளை 128 பேருக்கு அறிவித்துள்ளது.

இதில் கடந்த ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த  இந்தியாவின்  முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்,உ.பி முன்னாள் முதல்வர் கல்யாண்சிங்,பிரபா அட்ரே,ஸ்ரீ ராதேஷ்யாம் கெம்கா (இலக்கியம் கல்வி) ஆகிய நான்கு பேருக்கு பத்ம விபூஷண் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், சத்ய நாதெல்லா, சுந்தர் பிச்சை, தடுப்பூசி தயாரிப்பாளர்களான  கிருஷ்ணா எல்லா, சுசித்ரா எல்லா, சைரஸ் பூனவல்லா, புத்ததேப் பட்டாச்சார்ஜி உட்பட 17 பேருக்கு  பத்ம பூஷன் மற்றும் 107 பத்மஸ்ரீ விருதுகள் உட்பட மொத்தம் 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Castro Murugan