சென்னையில் கடைகளை கண்காணிக்க குழுக்கள் அமைப்பு

சென்னையில் கடைகளை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று  ஒரே நாளில் 1,205 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 74,969  ஆக அதிகரித்துள்ளது.இதன் விளைவாகத்தான் சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முழு ஊரடங்கு அமலில் இருந்து வந்தது.இதன் பின்னர் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலயில் சென்னை மாநகராட்சி ஆணையர்  பிரகாஷ் சென்னையில் காய்கறி கடைகள் ,மளிகை கடைகள் ,இறைச்சி மற்றும் மீன் அங்காடிகளை கண்காணிக்க 32 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார் .விதிமுறையை மீறி இருந்தால் அபாரதத்துடன் 14 நாட்களுக்கு கடைகள் மூடப்பட்டு சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.