ஐஜி முருகனுக்கு எதிரான பாலியல் புகாரை விரைந்து விசாரிக்க உத்தரவு!

சிபிசிஐடி விசாரணையை எதிர்த்து ஐஜி முருகன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

ஐஜி முருகனுக்கு எதிரான பாலியல் புகாரை விரைந்து விசாரித்து முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணையை விரைந்து விசாரித்து முடிக்க சிபிசிஐடி மற்றும் விசாகா கமிட்டிக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றிய ஐஜி முருகன் பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் எஸ்பி புகார் அளித்திருந்தார்.

பெண் எஸ்பி புகாரை அடுத்து பாலியல் புகார் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. சிபிசிஐடி விசாரணையை எதிர்த்து ஐஜி முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். ஏற்கனவே அமைக்கப்பட்ட விசாகா கமிட்டி மாற்றியமைக்கப்பட்டுள்ளதால் தற்போதைய விசாகா கமிட்டி விசாரிப்பதில் ஆட்சபனை இல்லை என ஐஜி முருகன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பாலியல் புகாரை விரைந்து விசாரித்து முடிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment