மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவு செய்தால் அதிக கட்டணம் வசூலிக்க உத்தரவு…!

மங்களகரமான நாட்களில் பத்திர பதிவு செய்தால் அதிக கட்டணம் வசூலிக்குமாறு உத்தரவு.

மங்களகரமான நாட்களில் பத்திர பதிவு செய்தால் அதிக கட்டணம் வசூலிக்குமாறு,  வணிகவரி மற்றும் பதிவுத் துறை முதன்மை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது அரசின் வருவாயைப் பெருக்கும் நோக்கில் சித்திரை முதல் தேதி ஆடிப்பெருக்கு மற்றும் தைப்பூசம் ஆகிய மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் அலுவலகங்களை செயல்பாட்டில் வைத்திருந்தால், பொதுமக்கள் பத்திரப்பதிவுக்கு தாக்கல் செய்ய ஏதுவாக இருக்கும். ஆகையால் மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறந்து வைக்க வேண்டும் என்றும் அத்தகைய நாட்களில் பதிவு செய்வதற்கு கூடுதல் கட்டணங்களை வசூலிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.