#OrangeAlert: தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு “ஆரஞ்சு அலார்ட்” – இந்திய வானிலை மையம்!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்படுகிறது என்று இந்திய வானிலை மையம் அறிவிப்பு.

குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிரமடைந்து வருவதால் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்படுகிறது என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய இலங்கை கடலோர பகுதியில் குறைந்த காற்றுழத்த தாழ்வு பகுதி நிலவுகிறது என்று தெரிவித்துள்ளது.

குறைந்த காற்றுழத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டின் கரையை நோக்கி நகர்வதால் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் நவம்பர் 1 வரை கனமழை நீட்டிக்கும் எனவும் கூறியுள்ளது.

சென்னை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, குமரி, நெல்லை, தூத்துக்குடியில் இன்று கனமழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்