பங்காரு அடிகளார் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய ஓபிஎஸ் – சசிகலா.!

ஆன்மிக பக்தர்கள் மத்தியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனின் மருஉருவமாக பார்க்கப்படும் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் நேற்று மாலை உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல், பிரதமர் நரேந்திர மோடி வரையில் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர் .

முதல்வர் மு.க.ஸ்டாலின் காலையிலேயே நேரில் வந்து பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு சென்றார். அதே போல மற்ற சில அமைச்சர்களும் , அரசியல் தலைவர்களும் பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஆண்களுக்கு சபரிமலை… பெண்களுக்கு மேல்மருவத்தூர்… பங்காரு அடிகளாரின் ஆன்மீக நகர்வுகள்.!

பங்காரு அடிகளார் உடலானது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் பொதுமக்கள் திரளானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முன்னதாக வி.கே.சசிகலா , பங்காரு அடிகளார் உடலுக்கு நேரில் வந்து தனது அஞ்சலியை செலுத்தினார். அதன் பிறகு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தனது இரங்கலை நேரில் வந்து செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆதிபராசக்தி தொண்டு பணியில் ஈடுபட்டு வரும் அனைவருக்கும், பங்காரு அடிகளாரது குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என கூறினார்.

இன்று மாலை பங்காரு அடிகளாரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துவிட்டார். ஆன்மிகம் மற்றும் கல்வி சேவைகாக கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசுக்கு பங்காரு அடிகளாருக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்து கௌரவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.