எதிர்க்கட்சிகள் அமளி ! நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கியது

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்தார்.எனவே பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த 2 ஆம் தேதி தொடங்கியது.இந்த கூட்டத்தொடர் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

கடந்த 2-ஆம் தேதி இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் செய்த அமளியால்  ஏதும் நடக்காமல்  ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில் இன்று  மீண்டும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியது.அப்பொழுது இரு அவைகளிலும்  டெல்லி வன்முறை ,காங்கிரஸ் எம்.பி.க்கள்  7 பேர் சஸ்பெண்ட் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.  இறுதியாக அமளி காரணமாக மக்களவை 12.30 மணி வரையும், மாநிலங்களவை 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது.