நாகை மாவட்டத்தில்  நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்படும்- அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

நாகை மாவட்டத்தில்  நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறுகையில்,  நாகை மாவட்டத்தில் விவசாயிகளின் தேவைக்கேற்ப நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்படும். 2018-19ல் நெல் கொள்முதல் நிலையம் மூலம் 3.60 லட்சம் மெட்ரிக்டன் நெல்லை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதல் ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,770 மத்திய அரசு அறிவித்துள்ளது என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment