நாளை முதல் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் திறக்கப்படும்

கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் நாளை முதல் திறக்கப்படவுள்ளது.

கொரோனா வைரஸ்  காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளே முடங்கி உள்ளனர்.ஆனால் இந்த சமயத்தில் மளிகை கடைகள்,காய்கறிக்கடைகள் உள்ளிட்டவை திறக்க நேரம் முடிவு செய்யப்பட்டது.மேலும் விவசாய பொருட்களுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை  முதல் கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடம்  திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .ஒழுங்குமுறை விற்பனை கூடம் விவசாயிகள் நலனுக்காக  திறக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கூறியுள்ளார்.