அதிகரிக்கும் ஆன்லைன் உணவு விற்பனைகள்.! வருங்காலத்தில் விண்ணை முட்டும் வளர்ச்சி காத்திருக்கிறது.!

இந்தியாவில் மட்டும் 2024ஆம் ஆண்டு கணக்கு நிலவரப்படி சுமார் 2 பில்லியன் டாலர் அளவு ஆன்லைன் உணவு விற்பனை வர்த்தகம் இருக்கும் என கணிக்கப்படுகிறது.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக உணவகங்களில் சாப்பிட பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்படுகின்றன. பெரும்பாலான முக்கிய நகரங்களில் உணவகங்களில் அமர்ந்து சாப்பிட தடை நிலவுகிறது.

இதன் காரணமாக ஆன்லைன் உணவு விற்பனை தற்போது அதிகரித்து விட்டது. இது சில உணவகம் நடத்துபவர்களுக்கும் தங்கள் வேலை சுலபமாகிவிட்டதாக நினைக்கிறார்கள். அதாவது, உணவக வாடகை செலவு, வேலை ஆட்கள், பராமரிப்பு ஆகியவை பெரும்பாலும் குறைந்துவிடும்.

இதனால், வரும் காலத்தில் இந்தியாவில் மட்டும் 2024ஆம் ஆண்டு கணக்கு நிலவரப்படி சுமார் 2 பில்லியன் டாலர் அளவு ஆன்லைன் உணவு விற்பனை வர்த்தகம் இருக்கும் என ஒரு ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.

ஓர் தனியார் அமைப்பு நடத்திய ஆய்வறிக்கையில் ஆன்லைன் மூலம் விற்கப்படும் உணவுகளுக்கு ஆதரவாக 21 சதவீத வாக்குகளும், உணவகங்களுக்கு சென்று சாப்பிட 10 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. மேற்கண்ட இத்தகைய காரணங்களுக்காக வருங்காலத்தில் உணவு விற்பனையானது உணவகங்களில் இல்லாமல், வீட்டிலேயே சமைத்து அதனை ஆன்லைன் மூலம் விற்றுவிடலாம் என உணவாக நிறுவனர்களுக்கு தோன்ற வைத்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.