12 மணி நேரத்துக்கு மேலாக ஆந்திராவில் கேஸ் கசிவு

ஆந்திராவில் ஓஎன்ஜிசிக்கு சொந்தமான கேஸ் பைப் லைனில் 12 மணி நேரத்துக்கு மேலாக கேஸ் கசிந்து வருகிறது .பயங்கர சத்தத்துடன் பைப் லைனில் இருந்து வெளியேறும் கேஸ் கசிவை சரி செய்ய ஓஎன்ஜிசி நிபுணர்கள் முயற்சி செய்து வருகின்றனர். 

ஆந்திர மாநிலத்தில் உள்ள கோதாவரி மாவட்டத்தில் ஓஎன்ஜிசிக்கு சொந்தமான கேஸ் பைப் லைன் உள்ளது.இந்த கேஸ் பைப் லைனில் 12 மணி நேரத்திற்கும் மேலாக கேஸ் கசிந்து வருகிறது. பயங்கர சத்தத்துடன் பைப் லைனில் இருந்து வெளியேறும் கேஸ் கசிவை சரி செய்யும் பணியில் ஓஎன்ஜிசி  நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.மேலும் 10 தீயணைப்பு  வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அருகில் உள்ள மக்கள்  மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் மின்சாரம் மற்றும் செல்போன் டவர்களின் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளது..