கொடூரன் கொரோனாவால் இந்தியாவில் மேலும் ஒருவர் உயிரிழப்பு ..!

அண்மை காலமாக உலகத்தையே அச்சுறுத்தி வரும் வைரஸ் கொரோனா .இந்த வைரஸ் சீனாவில் தொடங்கி தற்போது இந்தியா வரை பரவியுள்ளது.

இந்தியாவில் கொடூரன் கொரோனா அச்சம் காரணமாக மத்திய , மாநில அரசுகள் பல தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.  இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக  கடந்த 10-ம் தேதி கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 76 வயது முதியவர் உயிரிழந்தார்.

Image

இதையெடுத்து டெல்லியில் கொரோனா பாதிப்பால் சிகிக்சை பெற்றுவந்த 69 வயது மூதாட்டி ஒருவர் இன்று  உயிரிழந்தார். இந்த மூதாட்டி உயிரிழப்பை தொடர்ந்து இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியா முழுவதும்  கொரோனாவால்  82 பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா வைரஸ்  பரவாமல் இருக்க முன்னேச்சரிக்கை  நடவடிக்கையாக  பல மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan