ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஹர்திக் பாண்டியா சிறந்த கேப்டன்சி திறமைகளை வெளிப்படுத்தினார். இந்த நிலையில், ஒருநாள், டி20 அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டன் பொறுப்பேற்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய ரவி சாஸ்திரி “உலகக் கோப்பைக்குப் பிறகு, டெஸ்ட் கிரிக்கெட் ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் கேப்டன் பதவியை ஹர்திக் பாண்டியா ஏற்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். உலகக் கோப்பையில் ரோஹித் இந்தியாவை வழிநடத்த வேண்டும். அதில் எனக்கு ஒன்றும் மாற்றுக்கருத்தும் இல்லை.
இந்த நேரம் இந்திய அணியில் உள்ள சீனியர்கள் வெளியேற்றி இளம் திறமையான வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கவேண்டும். குறிப்பாக ஒருநாள், டி20 கிரிக்கெட் போட்டிகள் சமயத்தில் இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுப்பது அணிக்கு மிகவும் நல்லது” என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.