ஆதிபுருஷ் படம் பார்த்தேன்… கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என புரிகிறது..பங்கமாக கலாய்த்த சேவாக்.!!

பிரபாஸ், சைஃப் அலிகான் மற்றும் க்ரித்தி சனோன் நடித்த ஆதிபுருஷ் படம் வெளியாகி ஒரு வாரமாகிறது. இந்த படம் பல நெட்டிசன்களின் மீம் டெம்ப்ளேட்டாக மாறியுள்ளது என்றே கூறலாம். படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் மொக்கையாக இருப்பதாக பலர் கேலி செய்து வருகிறார்கள்.

படம் பார்த்த பலரும் மோசமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். மேலும் சில பிரபலங்களும் படத்தை பார்த்துவிட்டு தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கூட படத்தைப் பார்த்து கிண்டல் செய்து, பிரபாஸின் கடைசி பிளாக்பஸ்டர் பாகுபலி தொடர்பான நகைச்சுவையுடன் ஆதிபுருஷைப் பற்றிய தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

படத்தை பார்த்துவிட்டு சேவாக் தனது ட்விட்டரில், “ஆதிபுருஷரைப் பார்த்ததும் கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்று தெரிய வந்தது” என்று கேலி செய்தார். இவருடைய இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.