கருப்பு பூஞ்சைக்கு 20 நாள்களில் 32 பேர் பலி – மத்திய பிரதேச அரசு மருத்துவமனை அதிர்ச்சி தகவல்!

இந்தூரில் மருத்துவமனை ஒன்றில் 32 பேர் கருப்பு பூஞ்சையால் இறப்பு – மருத்துவமனை வளாகம் அதிர்ச்சி தகவல் !

இந்தியாவில் கொரோனாவின் 2 வது அலை ஒரு புரம் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் இந்த சூழலில் தற்போது புதிதாக பூஞ்சைத் தொற்றுகளாலும் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றது.

தற்போது இந்தியாவில் கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் என வித விதமாக பூஞ்சை தொற்றுகள் பரவி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மத்திய மற்றும் மாநில அரசுகள் பூஞ்சை தொற்றுகளைப் பற்றி மக்கள் அச்சப்பட வேண்டாம் என அறிவுறுத்தியிறுந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரத்தில் உள்ள அரசு நடத்தும் மருத்துவமனையில் கடந்த 20 நாட்களில் மியூகோர்மைகோசிஸ் எனும் கருப்பு பூஞ்சையால் 32 நோயாளிகள் இறந்ததாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தூரில் உள்ள மகாராஜா யேஷ்வந்த்ராவ் மருத்துவமனை (எம்.ஒய்.எச்) மத்திய பிரதேசத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஏராளமான கருப்பு பூஞ்சை நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறது.

அங்கு மே 13 ஆம் தேதி கருப்பு பூஞ்சையின் முதல் நோயாளி அனுமதிக்கப்பட்டார், அதைத்தொடர்ந்து 439 பேர் கருப்பு பூஞ்சையாள் புதியதாக பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது 84 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதில் 14 பேருக்கு கொரோனா இருந்ததாகவும், மேலும் 301 பேர் கொரோனா வைரஸ் தொற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் என்றும் மீதமுள்ள 8 பேருக்கு கொரோனா இல்லை என்றும் (எம்.ஒய்.எச்) கண்காணிப்பாளர் பிரமேந்திர தாகூர் கூறியுள்ளார்.

அதனிடையே 20 நாளில் 32 நோயளிகள் கருப்பு பூஞ்சையாள் இறந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற கடந்த 20 நாட்களில் 200 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டோம் என தாகூர் கூறியுள்ளார்.

தற்போது 323 நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.