ஐ.ஜி.பொன்மாணிக்கவேலுக்கு ஒத்துழைப்பு அளிக்காத அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்படுவார்கள் : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

ஐ.ஜி.பொன்மாணிக்கவேலுக்கு ஒத்துழைப்பு அளிக்காத அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவேலு ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில், கிண்டியில் தமக்கு அலுவலகம் மறுக்கப்படுவதாகவும், நீதிமன்றம் உத்தரவிட்டும், அலுவலகம் இல்லாமல் தான் தெருவில் நிற்பதாகவும், காவல்துறை அதிகாரிகள் தமக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை எனவும் சிலை கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரி ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் கூறியுள்ளார்.

இதனை விசாரித்த நீதிபதிகள், பொன்மாணிக்கவேலுக்கு ஒத்துழைக்காத அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்பாடுவார்கள் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment