பிறந்தநாளை கொண்டாட மறுத்த ஒடிசா முதல்வர்! காரணம் இதுதானா?

கொரோனா பரவலால் தனது பிறந்தநாளை கொண்டாட மறுத்த ஒடிசா முதல்வர்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி  நிலையில், இதனை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது.

இந்நிலையில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இன்று தனது 74-வது பிறந்தநாள் கொண்டாடுகிறார்.  இவர் கொரோனா பரவல் காரணமாக, தனது பிறந்தநாளை கொண்டாட மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கொரோனா பரவல் காரணமாக, தனது ஆதரவாளர்கள் அவரது வீட்டிற்கு விஜயம் செய்ய வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக ஏழைகளுக்கு உதவவும், அந்த நேரத்தில் இரத்தம் மற்றும் பிளாஸ்மாவை தானம் செய்யவும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், ஒடிசா மக்களின் அன்பு மற்றும் நல்வாழ்த்துக்களுக்கு நான் எப்போதும் கடன்பட்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இவர் தனது பிறந்தநாளை மூன்றாவது முறையாக கொண்டாட மறுத்துள்ளார். இவர், ஃபானி சூறாவளி காரணமாகவும், 2018 ஆம் ஆண்டில் மாநிலத்தை நாசப்படுத்திய டிட்லி சூறாவளியின் காரணமாகவும் தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.