இப்பொழுது உயிர்தான் முக்கியம், இவர்களைப் பார்ததாவது கற்றுக்கொள்ளுங்கள் -நடிகை தமன்னா!

கொரோனா வைரஸ் காரணமாக தற்போது இந்தியா முழுவதும்  21 நாளைக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய நடிகை தமன்னா, ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது, அரசு அறிவித்திருக்கக்கூடிய இந்த 21 நாளும் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் குடும்பத்தோடு இருங்கள். இது நம் இந்த உத்தரவை அலட்சியமாக எண்ணாமல் நம்மை பாதுகாப்பதற்காகவும், காப்பாற்றுவதற்காகவும் அரசு எடுத்துள்ள நல்ல முடிவாக எடுக்க வேண்டும்.

தற்போது நாம் உயிரோடு இருக்க வேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம். நல்ல நிலையில் இருப்பவர்கள் வீட்டிற்குள் இருக்கிறோம் ஆனால் ஏழைகள் படிப்பறிவில்லாத கிராமத்தினர் வீடுகளுக்கு வேலி போட்டு பாதுகாப்பாக யாரையும் உள்ளே விடாமல் இருக்கிறார்கள். அவர்களை பார்த்தாவது படித்த நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என தமன்னா கூறியுள்ளார்.

author avatar
Rebekal