மாற்றுத்திறனாளிகளின் வாகனங்களை பழுது நீக்க உதவி எண்கள் அறிவிப்பு..!

கடந்த சில நாட்களுக்கு முன் மிக்ஜாம் புயலின் கோரத்தாண்டவத்தால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதிலும், சென்னையில் பெய்த கனமழை அங்கு பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியது.

அந்த வகையில் சேனையின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. அதனை தொடர்ந்து மாநகராட்சி பணியாளர்கள், மீட்புக்குழுவினர் என ஆயிரக்கணக்கானோர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

பொங்கல் பண்டிகை – அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்…!

இந்த மழை வெள்ளத்தில் பெரும்பாலானவர்களின் வாகனங்கள், வீட்டில் இருந்த குளிசாதன பேட்டி, வாஷிங் மெஷின், டிவி என பெரும்பாலான பொருட்கள் பழுதடைந்து விட்டது. சென்னை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், வீட்டில் பழுதான பொருட்களை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்ற்னர்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உபயோகப்படுத்தும் உதவி உபகரணங்களை பழுது நீக்க தொலைபேசி எண்களை அறிவித்தது.  அதன்படி, 9499933589, 044 – 29993612, 9499933470, 044 – 24315758, 9499933496, 044-27662985, 9499933582, 044 – 29998040, 044 – 27431853 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.