காவல்துறையினர் யாரும் பரிசு பொருட்கள் பெறக்கூடாது – டிஜிபி டி.கே.திரிபாதி உத்தரவு!

காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் யாரும் பரிசுப்பொருட்கள் பெறக்கூடாது என்று தமிழக சட்ட ஒழுங்கு பிரிவு டி ஜி பி டி.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தும் விதமாக டி ஜி பி இந்த முறையை அமுல்படுத்திக்கிறார். அதன்படி, காவலர்கள் யாரும் இனிமேல் நேரடியாகவோ அல்லது மறைமுகவோ எந்த வித பரிசு பொருட்களையும் வாங்க கூடாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பரிசு பொருட்கள் வேண்டுமானால் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அதற்கும் டி ஜி பி யின் முன் அனுமதி பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அவ்வாறு பெறக்கூடிய பரிசு பொருட்களின் விலையானது 200 ரூபாய்க்கு குறைந்து தான் இருக்க வேண்டும் என்றும் டிஜிபி தெரிவித்துள்ளார். இந்த உத்தரவை மீறி யாரேனும் செயல்பட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.