சட்டத்தை யாரும் கையில் எடுக்க கூடாது – அமைச்சர் ஜெயக்குமார்

சட்டத்தை யாரும் கையில் எடுக்க கூடாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துளளார்.

திருப்போரூர் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக  திமுக எம்எல்ஏ இதயவர்மன் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் அவரை  காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலயில் இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், திமுக என்றாலே வன்முறைக் கலாச்சாரம்தான்.நில அபகரிப்பு திமுக ஆட்சிக் காலத்தில் அதிகம் இருந்தது.துப்பாக்கிக் கலாச்சாரமும் தற்போது திமுகவில் தலைதூக்கிவிட்டது.சட்டத்தை யாரும் கையில் எடுக்க கூடாது,ஆட்சியில் இல்லாதபோதே இப்படி அரங்கேறுகிறது என்று தெரிவித்துள்ளார்.