கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது- ராகுல் காந்தி

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது என ராகுல் காந்தி பேச்சு. 

கர்நாடகாவில் மே 10-ஆம் தேதி கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் முனைப்புடன் செயல்பட்டு வரும் நிலையில், கர்நாடகாவில் பாஜக ஆட்சியில்  இருந்து வருகிறது. அந்த வகையில், பாஜகவினர் தங்களது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், காங்கிரஸ் கட்சியினர் எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தில் .ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பிரியங்கா காந்தி அவர்கள், கடையில் தோசை சுட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

காங்கிரஸ் ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது

Rahul Gandhi
Image source REUTERS

இந்த நிலையில், இன்று கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது; குறைந்தத்த்து 150 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.