இனி தமிழ் வேண்டாம் !ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் தகவல்களை பரிமாற வேண்டும்-தெற்கு ரயில்வே உத்தரவு

கடந்த சில நாட்களுக்கு முன் மதுரை திருமங்கலம் அருகே ஒரே பாதையில் இரண்டு ரயில்கள் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதற்கு காரணம் மொழி பிரச்சினைதான் என்று விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில் தெற்கு ரயில்வே ஒரு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில்,தகவல் பரிமாற்றம் யாரேனும் ஒருவருக்கு புரியாமல் போவதை தவிர்க்க, தமிழகத்தில் ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை இடையே நடக்கும் தகவல் பரிமாற்றம் மாநில மொழியில் (தமிழில்) இருக்க வேண்டாம் என்றும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் தகவல்களை பரிமாற வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரயில்வேயில் வடமாநிலத்தவர் சேர்க்கைக்கு எதிர்ப்பு எழுந்து வந்த நிலையில் தற்போது தற்போது ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் தகவல்களை பரிமாற வேண்டும் என்ற உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.