அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை…! உதயநிதி ஸ்டாலின் மனைவி அதிரடி..!

அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா தெரிவித்துள்ளார். 

சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் குதிரைகளுக்கான சிறப்பு முகாமினை கிருத்திகா உதயநிதி தொடங்கி வைத்தார். குதிரைகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், இந்த மருத்துவ முகாம் நடைபெற்றது.

குதிரைகளுக்கான பாதுகாப்பு உபகரணங்கள், மருத்துவ பொருட்களை கிருத்திகா உதயநிதி வழங்கினார். அப்போது, அரசியலுக்கு வருவீர்களா என்ற கிருத்திகா உதயநிதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த அவர், அரசியலுக்கு வரும் எண்ணம் தனக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.