காங்கிரஸ் தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்படவில்லை – முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்.!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. அப்போது நடைபெற்ற விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ், குளச்சலில் நடைபெற்ற ஊர்வலத்தில் தடியடி விவகாரம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அதில் தடியடிய நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி, குளச்சலில் தடையை மீறி ஊர்வலம் சென்ற காங்கிரஸ் தொண்டர்கள், தடுத்து நிறுத்திய போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறினார். மேலும் பேரணி சென்றவர்கள் தாக்கியதில் 4 போலீசார் காயம் அடைந்திருப்பதாக தெரிவித்த முதலமைச்சர், காங்கிரஸ் தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்படவில்லை என விளக்கம் அளித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்