நிர்பயா குற்றவாளி முகேஷ் சிங் மனு மீண்டும் தள்ளுபடி.!

டெல்லியில் மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக குற்றவாளிகளாக ராம்சிங், ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங், வினய்ஷர்மா, பவன்குப்தா, அக்சய் குமார் சிங் தாகூர் , ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

 ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டு 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான். குற்றவாளியான ராம்சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

மீதமுள்ள முகேஷ்சிங், வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 4 பேரும் அடுத்தடுத்து மனுக்கள் தாக்கல் செய்ததால் தூக்கு தண்டனை மூன்று முறை தள்ளிப்போனது.இந்நிலையில் நாளை தூக்கி உறுதி செயப்பட்டுள்ளது.

 குற்றவாளி முகேஷ் தனது தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி நேற்று முன்தினம் காலை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஒரு மனுவை  தாக்கல் செய்தார். அந்த மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து குற்றவாளி முகேஷ் சிங்  தூக்கு தண்டனையை ரத்து செய்யகோரி கொடுக்கப்பட்ட மனுவை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் நேற்று முன்தினம்  தள்ளுபடி செய்ததை எதிர்த்து நேற்று காலை மனு தாக்கல் செய்தார்.

 அந்த மனுவில் பாலியல் சம்பவம் நடக்கும் போது நான்  அந்த இடத்தில் இல்லை என கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று டெல்லி உயர் நீதிமன்றம் முகேஷின் மனுவை தள்ளுபடி செய்தது.

author avatar
murugan