அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும்.! வானிலை ஆய்வு மைய இயக்குனர் தகவல்.!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அரபி கடல் நோக்கி நகர்ந்து வருவதால், அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும். – வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தகவல்.

வானிலை ஆய்வு தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தமிழக வானிலை, மலையளவு குறித்த விவரங்களை வெளியிட்டார். அவர் குறிப்பிடுகையில், கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கனமழை பெய்து உள்ளது என தெரிவித்தார். அதிகபட்சமாக மயிலாடுதுறையில் அதிக மலையளவு பதிவாகியுள்ளது என கூறினார் .

மேலும், அடுத்த 24 மணிநேரத்தில் கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் எனவும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, சேலம்  ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், குமரிகடல், தென்மேற்கு வங்க கடல், மன்னார் வளைகுடா என தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று இன்றும் நாளையும் வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தினார்.

மேலும், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அரபி கடல் நோக்கி நகர்ந்து வருவதால், அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார் .

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment