100 நாட்களாக கொரோனா இல்லை ! இயல்புநிலைக்கு திரும்பும் நியூசிலாந்து

100 நாட்களாக கொரோனா இல்லை என்பதால்  இயல்புநிலைக்கு திரும்புகிறது  நியூசிலாந்து.

கொரோனா வைரஸின் தாக்கம் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.உலக நாடுகளை பொருத்தவரை அமெரிக்கா தான் கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் உள்ளது.அங்கு 50,06,474 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,61,964 பேர் கொரோனாவால் உரியிழந்துள்ளனர்.

இதனிடையே நியூசிலாந்து நாட்டில்,கடந்த 100 நாட்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை.இதனால் நியூசிலாந்து மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பு வருகிறது. அங்கு 2-ஆம் அலை ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கும் நிலையில்,மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.மேலும் வரும் காலங்களில் மீண்டும் கொரோனா வந்தாலும் அதனை எதிர்கொள்ள நாடு மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.