திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கிராமத்தில், தனது வீட்டு தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, பராமரிப்பின்றி கிடந்த ஆழ்துளை கிணற்றில், 2 வயது குழந்தையான சுஜித் விழுந்ததில், 5 நாட்களுக்கு பின் இவரது உடல் சடலமாக மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.
இதனையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து ஆழ்துளை கிணறுகளை மூடுமாறு, அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், 24 மணி நேரத்திற்குள் பயன்படாமல் கிடைக்கும் ஆழ்துளைக்கிணறுகளை மழைநீர் சேகரிப்பு நிலைகளாக மாற்ற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து, அதிமுக தொழில்நுட்ப பிரிவு, அபாய நிலையிலுள்ள ஆழ்துளை கிணறுகளை கண்டறிய “விசில் ரிப்போர்ட்டர்” என்ற செயலியை உருவாக்கியுள்ளது. இந்த செயலியை பிளே ஸ்டோரில் தரவிறக்கல் செய்து கொண்டு, மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை பற்றிய தகவல்களை தெரிவிக்கலாம்.
இந்த செயலியை பயன்படுத்துபவர்கள், பயன்படாத ஆழ்துளை கிணற்றின் அருகில் நின்றுகொண்டு, செயலின் வலதுபுறமாக கீழே இருக்கும் பச்சை நிற பொத்தானை அழுத்தினாள் தகவல் சென்றுவிடும். பிறகு உங்களது லொகேஷனை கண்டுபிடித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த செயலி குறித்த விபரங்களை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…
Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி வெற்றி பெற்றதை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின்…
Mobile Heat Solution : இந்த கோடை காலத்தில் போன் ரொம்பவே ஹிட் ஆகிறது என்றால் ஹீட் குறைய கீழே டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போனில்…
மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…
Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…