புதுக்கோட்டையில் முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா.!

தமிழகத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இன்று மட்டுமே 43 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் மொத்த எண்ணிக்கை 1,520 ஆக உயர்ந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக இன்று சென்னையில் 18 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் 303 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இதுவரை கொரோனா தொற்று பரவாமல் இருந்துவந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.