#BREAKING: புதிய கல்விக் கொள்கை- தமிழக அரசு புறக்கணிப்பு..!

புதிய கல்விக் கொள்கை தொடர்பான மத்திய கல்வி அமைச்சர் தலைமையில் நடைபெறும் ஆலோசனையை தமிழக அரசு புறக்கணித்து இருக்கிறது.

இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு வடிவமைத்த “கல்விக் கொள்கை-2020” -க்கு மத்திய அரசு கடந்த ஆண்டு ஒப்புதல் வழங்கியது. புதிய கல்விக் கொள்கை அனைவருக்கும் சென்று சேரும் வகையில், மத்திய அரசு அதனை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டு இருந்தது.

2021-ம் ஆண்டுக்குள் கல்விகொள்கையை அமல்படுத்த அறிவுறுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து, புதிய கல்விக்கொள்கையை அமல் செய்வது குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்த மத்திய அரசு முடிவு செய்து அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, நேற்று தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு எழுதிய கடிதத்தில் புதிய கல்விக் கொள்கை தொடர்பான கூட்டத்தை மாநில கல்வித்துறை அமைச்சருடன் நடத்துவதே ஏற்புடையது. புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக நீங்கள் ஆலோசனை செய்கிறீர்கள் எனவே பள்ளிக்கல்வித் துறை செயலாளர்கள் உடன் ஆலோசனை செய்ய வேண்டாம்.

அமைச்சர்கள் மட்டத்தில் ஆலோசனை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் விடுத்த கோரிக்கையை ஏற்கபடாத நிலையில் ரமேஷ் பொக்ரியாலுடனான ஆலோசனையை தமிழக அரசு  புறக்கணித்துள்ளது.

author avatar
murugan