நெல்லையில் வீட்டை விட்டு வெளியே செல்பவர்களுக்கு புதிய நிபந்தனை.!

நெல்லையில் அத்தியாவசிய தேவைகளுக்கு வீட்டை விட்டு வெளியே செல்பவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி பச்சை, ஊதா, சிகப்பு ஆகிய மூன்று நிறங்களில் பொதுமக்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்படவுள்ளது. இதில் பச்சை நிற அட்டை திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளிலும், ஊதா நிற அட்டை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், சிகப்பு நிற அட்டையை புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதி சீட்டு காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை செல்லும் என்றும் ஆனால் மருத்துவ அவசரத்திற்கு விதிவிளக்கு என்று மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் 15 வயதிற்கு மேல் 60 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே வெளியே அவர் அனுமதிக்கப்படுவார்கள் என அம்மாவட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் கொரோனாவால் 911 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் திருநெல்வேலியில் இதுவரை 56 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்