பெண்களை ஏமாற்றிய நாகர்கோவில் காசி மீது தற்பொழுது புதிய புகார்!

பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்ததாக கைது செய்யப்பட்டுள்ள நாகர்கோவில் காசி மீது மேலும் ஒரு கந்துவட்டி புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவிலை சேர்ந்த காசி என்ற சுஜித் எனும் இளைஞன் தன்னுடைய அழகாலும் சமூக வலைதள பலத்தையும் கொண்டு பல பெண்களை காதலிப்பதாகக் கூறி அவர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வைத்து அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார்.

இது தொடர்பாக அண்மையில் தைரியமாக அவரை காதலித்து வந்த பெண் மருத்துவர் ஒருவர் போலீசில் புகார் அளித்திருந்தார். அதில் காசி மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நாங்குநேரி ஜெயிலில் போலீசார் அடைத்தனர். இந்நிலையில், இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மேலும் பல பெண்கள் காசி மீது புகார் கொடுத்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது காசி மீது கந்துவட்டி  அளிக்கப்பட்டுள்ளது. இவர் மீது ஒருவர் தான் வாங்கிய 2 லட்சம் ரூபாய்  கந்து வட்டியாக திரும்ப கொடுத்த பின்னரும், அவரது வாகனத்தை பறித்துக்கொண்டதாக காசி மீது ஒருவர் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று கொண்டுள்ளது.

author avatar
Rebekal