தமிழகத்தில் குறைந்தது கொரோனா பாதிப்பு… புதிய பாதிப்பு 35,873 ஆக பதிவு… 448 பேர் உயிரிழப்பு !

தமிழகத்தில் இன்று பல நாட்களுக்கு பிறகு குறைந்தது கொரோனா பாதிப்பு… 35,873 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்…

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 35,873 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதனால் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18,06,861 பேராக அதிகரித்துள்ளது.

மேலும் சென்னையிலும் குறைந்தது கொரோனா தொற்று பாதிப்பு இன்று மட்டும் 5,559 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 448 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதுவரை தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20,046 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெறிவித்துள்ளது. மேலும் இன்று கொரோனாவிலிருந்து 25,776 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையிலும் 15,02,537 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,75,231 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2,61,24,748 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தற்போது கொரோனா வார்டில் 2,84,278 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.