ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்திய நேபாள பிரதமர்…!

நேபாள பிரதமர் ஷேர் பகதூர்  தியூபா அவர்கள் நேற்று இந்தியா வந்துள்ளார். மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள ஷேர் பகதூர்  தியூபா டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்தித்துப் பேசியுள்ளார்.

மேலும், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் சங்கர் ஆகியோரையும் சந்தித்து பேசியுள்ளார்.

நேபாள பிரதமர் ஷேர் பகதூர்  தியூபாவின் இந்த பயணத்தில், பொருளாதார வளர்ச்சி, இருநாட்டு உறவு குறித்து ஆலோசனை நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேபாள பிரதமர் ஷேர் பகதூர்  தியூபா இன்று ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

author avatar
Rebekal