நயன்-விக்கி இரட்டை குழந்தை விவகாரம் – நாளை அறிக்கை வெளியிடப்படும் – அமைச்சர் சுப்பிரமணியன்

வாடகை தாய் விவகாரம் குறித்து அமைக்கப்பட்ட விசாரணை குழு அறிக்கை நாளை மாலை வெளியிடப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

நட்சத்திர தம்பதிகளாக நடிகை நயன்தரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் கடந்த ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அடுத்த 4 மாதங்களில் சரியாக அக்டோபர் 9ஆம் தேதி தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்ததாக அறிவித்தனர்.

திருமணம் ஆன 4 மாதங்களில் குழந்தை பெற்ற விவகாரம் தற்போது பேசும் பொருளாகி உள்ளது. இதுதொடர்பாக நடிகை நயன்தரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோரிடம் விளக்கம் கேட்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்ததோடு, 4 பேர் கொண்ட குழுவையும் அமைத்தார்.

இந்த நிலையில்,  இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், வாடகை தாய் விவகாரம் குறித்து அமைக்கப்பட்ட விசாரணை குழு அறிக்கை நாளை மாலை வெளியிடப்படும் என  தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment