எனது வீட்டில் குண்டுவெடித்தது! இந்திய பத்திரிக்கையாளர் ட்வீட்!

எனது வீட்டிலும் குண்டு வெடித்ததாக இந்திய பத்திரிக்கையாளர் தெரிவித்துள்ளார்.

லெபனானின் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் ஒரு பெரிய குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் குறித்த தெளிவான தகவல்கள் இன்னும் வெளி வரவில்லை.

துறைமுகத்தில் இருந்து நூறு அடி தூரத்தில் உள்ள கட்டிடங்கள் சேதம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து இந்திய பத்திரிக்கையாளர் அஞ்சல் வோஹ்ரா தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை  பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், தனது வீட்டிலும் குண்டு வெடிப்பு ஏற்பட்டதாகவும், தனக்கும் இரத்த போக்கு ஏற்பட்டதாகவும் பதிவிட்டுள்ளார். தற்போது அவர் இரத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.