கடவுளின் குழந்தைகளான மாற்றுத்திறனாளிகளுக்கு எனது வாழ்த்துக்கள் – டிடிவி தினகரன்

மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிக்களுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து

இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படும் நிலையில், மாற்றுத்திறனாளிக்களுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில், ‘கடவுளின் குழந்தைகளான மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பு இல்லாமல், சமூகத்தின் வளர்ச்சி முழுமை அடையாது என்பதை புரிந்துகொண்டு அவர்களுக்கான உரிமைகளை வழங்கிடவும், உயர்வுகளை ஏற்படுத்தித் தந்திடவும் இந்நாளில் அனைவரும் உறுதி ஏற்றிடுவோம்.

வாழ்வின் தடைகள் அனைத்தையும் தகர்த்து, உலகம் போற்றுகிற சாதனையாளர்களாக மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவரும் ஒளிர்ந்திட இறையருளிடம் வேண்டுகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment