நடிகர் விஜய் சேதுபதி தற்போது இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள “DSP” எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் கூட நேற்று வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.
இதற்கிடையில், விஜய் சேதுபதி இசை கற்று கொண்டு எதாவது படத்தில் இசையமைக்கப்போவதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து நடிகர் விஜய் சேதிபதி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” இசை என்பது நம்மை பக்குவப்படுத்துது. சாந்தமாக்குது. நல்ல இசையைக் கேட்டால் புதுசாக வாழ்க்கையை அணுக முடியும் என்று தோணுகிறது.
இதையும் படியுங்களேன்- யூடியூபில் அதிகம் பார்வையாளர்களை பெற்ற TOP -10 தமிழ் பாடல்கள்.!
மிருதங்கம், கிடார், வாய்ப்பாட்டு 3 கிளாஸ் முன்னாடியே சென்றிருக்கேன் இப்போது சமீபத்தில் தான் ஒரு 5 மாதங்களாக தொடர்ந்து கிளாஸ் போயிட்டு இருக்கேன். இன்னும் மிகவும் நுணுக்கமாக இசையை உணரவும், படிக்கவும் கொஞ்சம் உழைக்க வேண்டும் என்று தோணுகிறது.
காசோடு சேர்த்து இங்கே வேலையையும் மக்கள் கொடுக்கிறாங்க. அதற்கு நுணுக்கமாகத் தர நாமளும் கொஞ்சம் உழைப்பைப் நிச்சியமாக போடவேண்டும் என்று தெரிவித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.