பள்ளி சிறுமி மீது ஆசிட் வீசியவர்களை பொதுவெளியில் தூக்கிலிட வேண்டும்.! எம்.பி கெளதம் கம்பீர் ஆவேசம்.!

துவாரகாவில் பள்ளி மாணவி மீது ஆசிட் வீசிய குற்றவாளியை பகிரங்கமாக தூக்கிலிட வேண்டும். – கிழக்கு டெல்லி பாஜக எம்பியான கவுதம் கம்பீர் டிவீட்.

இன்று காலை டெல்லி, துவராகவில் 17 வயது பள்ளி சிறுமி மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஆசிட் வீசியுள்ளார். இதில் முகத்தில் சேதமடைந்த அந்த சிறுமி தற்போது டெல்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் ஒருவரை கைது செய்ததாக கூறப்படுகிறது. இன்னொரு குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிழக்கு டெல்லி பாஜக எம்பியான கவுதம் கம்பீர் தனது டிவிட்டர் பக்கத்தில், வார்த்தைகளால் எந்த நீதியையும் பெற முடியாது. இதனை செய்த விலங்குகளுக்கு அளவிட முடியாத வலியைப் பற்றிய பயத்தை நாம் ஏற்படுத்த வேண்டும். துவாரகாவில் பள்ளி மாணவி மீது ஆசிட் வீசிய குற்றவாளியை பகிரங்கமாக தூக்கிலிட வேண்டும். என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

 

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment