ரொனால்டோ மெஸ்சியை சந்திக்க டிக்கெட் கோரியுள்ள 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்..!

லியோனல் மெஸ்ஸியும் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக நேருக்கு நேர்   எதிர்கொள்ளவுள்ளனர்.  

ஜனவரி 19 அன்று சவுதி அரேபியாவில் லியோனல் மெஸ்ஸியின் PSG போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடுவதைக் காண இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் டிக்கெட் கோரியுள்ளனர் என்று தகவல்கள்  வெளியாகியுள்ளது.

லியோனல் மெஸ்ஸி தற்போது பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் எனப்படும பிஎஸ்ஜி அணியில் இடம்பெற்றிருக்கிறார். அதேபோல் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சௌதி அரேபியாவின் அல்-நாசர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

இவ்விரு அணிகளும் வரும் 19-ஆம் தேதி சௌதி அரேபிய தலைநர் ரியாத்தில் நடைபெறும் நட்பு ஆட்டத்தில் மோதிக் கொள்ள இருக்கின்றன. மன்னர் பஹத் அரங்கில் இந்தப் போட்டி நடைபெற இருக்கிறது.

68,000 பேர் கொண்ட அரங்கத்தில் லியோனல் மெஸ்ஸியும் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக நேருக்கு நேர்   எதிர்கொள்ளவுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment