‘தமிழக, தமிழ்நாடு பொங்கல்’ – ஆளுநர்களை வம்புக்கு இழுப்பது அதிகமாகி விட்டது – தமிழிசை

ஆளுநர்களை வம்புக்கு இழுப்பது அதிகமாகிவிட்டது என தமிழிசை பேட்டி. 

சென்னையில் விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் ஆளுநர் தமிழிசை பொங்கல் கொண்டாடினார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இன்று கொண்டாடப்படும் பொங்கல் தமிழக, தமிழ்நாடு பொங்கல் என தெரிவித்துள்ளார்.

அரசியல் தலைவர்கள் வரம்பு மீறி பேசக்கூடாது. தமிழ்நாடும் வேண்டும் தமிழகமும் வேண்டும். ஆளுநர்களை வம்புக்கு இழுப்பது அதிகமாகிவிட்டது. முதல்வர் ஆளுநரை விமர்சிக்க வேண்டாம் என கூறியும், தமிழக ஆளுநரை இணையதளங்களில் தவறாக விமர்சிக்கிறார்கள். சிறிய கருத்து வேறுபாடு இருந்தாலும் நாகரிகத்தோடு வரம்பு மீறாமல் விமர்சனம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment