எத்தியோப்பிய நாட்டின் மேற்குப் பகுதியில் சமீபத்தில் இனரீதியான படுகொலையில் 100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்கா எத்தியோப்பிய நாட்டின் மேற்குப் பகுதியில் சமீபத்தில் இனரீதியான படுகொலையில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. அந்நாட்டு ஊடகம் கூறுகையில், பெனிஷங்குல் – குமுஸ் பிராந்தியத்தின் மெட்டகல் மண்டலத்தில் நேற்று அதிகாலை இந்த தாக்குதல் நிகழ்ந்ததாக சாட்சிகளை மேற்கோள் காட்டி ஒரு தனி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, அந்நாட்டு பிரதமர் அபி அகமது அப்பகுதிக்குச் சென்று இதற்கு முன் நடந்த தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களை நீதிக்கு கொண்டுவர வேண்டியதன் அவசியம் குறித்து பேசிய ஒரு நாள் கழித்து, இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது. 80க்கும் மேற்பட்ட இனங்களைக் கொண்ட ஒரு நாட்டில் தேசிய ஒற்றுமையை வளர்க்க அபி அகமது முயற்சிப்பதால் இனப் பதட்டங்கள் ஒரு பெரிய சவாலாக கருதப்படுகிறது.
நேற்று மாலை தொலைதூர கிராமங்களில் சிலர் சுற்றிவளைத்து மக்களுக்கு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை 200க்கு மேல் என்று அம்ஹாரா அரசியல் கட்சியின் தேசிய இயக்கத்தின் தலைவர் பெலட் மொல்லா தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது தெரியவில்லை என்றும் அவர்கள் குமுஸ் போராளிகள் என்று பெலட் குறிப்பிட்டுள்ளார். ஆளும் கட்சியான பெனிஷங்குல்-குமுஸ் செழிப்பு கட்சி ஒரு அறிக்கையில் ஆயுதக் கொள்ளைக்காரர்கள் இந்த தாக்குதலை செய்துள்ளதாகக் கூறியுள்ளது.
எத்தியோப்பியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட 2வது இனக்குழு அம்ஹாராக்கள். இப்பகுதியில் உள்ள அம்ஹாராக்கள் மீது சமீபத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேற்கு ஒரோமியா பிராந்தியத்தில் நவம்பர் 1-ம் தேதி நடந்த ஒரு கிளர்ச்சி தாக்குதலில் குறைந்தது 54 பேர் கொல்லப்பட்டதாக அம்னஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்திருந்தது. இதேபோன்ற தாக்குதல்களைத் தொடர்ந்து 300 க்கும் மேற்பட்ட மக்களை இடமாற்றப்பட்டடுள்ளது என மனித உரிமைகள் ஆணையம் கவலையுடன் தெரிவித்துள்ளது.
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் விடீயோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…
Morning Exercise-காலையில் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை இப்பதிவில் காணலாம். உடல் ஆரோக்கியமாகவும் ,கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி பயிற்சியின்…